பா.ம.கவால் திமுக-காங். இடையே மோதல்: இருப்பினும் இன்று தொகுதி உடன்பாடு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாண்டிச்சேரி தவிர, வட மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே கடும் கோபம் நிலவுகிறது.
காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடலாம் என்றுகூட கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவர்களை டெல்லி தலைமையும், தமிழக காங்கிரஸ்பார்வையாளர் கமல்நாத்தும் அமைதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவு தலைவர்களோ, பாண்டிச்சேரி காங்கிரசார், குறிப்பாக அம் மாநில காங்கிரஸ்தலைவர் நாராயணசாமி ஆரம்பத்தில் இருந்தே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்ததால் தான், அந்தத்தொகுதியை பா.ம.கவுக்குக் கொடுத்து நமக்கு கருணாநிதி பாடம் புகட்டியுள்ளார் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் வசம் உள்ள வன்னிய இன வாக்குகள் அனைத்தும் பா.ம.கவுக்கே போகும் வகையில் வட மாவட்டத்தொகுதிகளை அக் கட்சிக்கே கொடுத்து நம்மை திமுக முதுகில் குத்திவிட்டதாக திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டவன்னிய இன காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
எப்படி இருந்தாலும் திமுக கூட்டணி உறுதி என்று கூறிவிட்ட கமல்நாத், 10 தொகுதிகளை திமுக கொடுத்தாலும்ஏற்கச் சொல்லிவிட்டது நம் தலைமை என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
திமுக கொடுக்கும் தொகுதிகளில் ஒழுங்காகப் போட்டியிட்டு, உழைத்து, ஒருவரை ஒருவர் காலை வாரிவிடாமல்,ஒற்றுமையாய் பாடுபட்டு அனைத்திலும் வெல்ல வேண்டியது உங்கள் கடமை என கமல்நாத் கூறியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் நம் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே தங்களுக்கு ஆதரவு அதிகமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி, திமுகவிடம்தந்துள்ளது. இதில் 12 தொகுதிகளையாவது திமுக ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆனால், இதில் 10 தொகுதிகளை திமுக வழங்கும் என்று தெரிகிறது.
இன்று மீண்டும் திமுக தேர்தல் குழுவை சந்தித்து காங்கிரஸ் குழு பேச்சு நடத்தவுள்ளது. அப்போது தொகுதிகள்தொடர்பான உடன்பாடு ஏற்பட்டவுடன், தொகுதிப் பங்கீட்டில் இன்று மாலையே திமுக தலைவர் கருணாநிதியும்காங்கிரஸ் தரப்பில் கமல்நாத்தும் கையெழுத்திடுவர் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications