மகாத்மா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
சென்னை:
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள காந்தி சிலைக்கு தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
இன்றைய தினம், தேசப் பிதா மகாத்மா காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட தினமாகும். தியாகிகள்தினமாக இது அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்திசிலைக்கு சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். தியாகிகள் பங்கேற்ற நூல் நூற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 11 மணிக்கு சென்னை நகரின் போக்குவரத்து சிக்னல்கள் நிறுத்தப்பட்டு காந்திக்கு 2 நிமிடம் மெளனஅஞ்சலி செலுத்தினர். சாலைகளில் நடந்து சென்றவர்களும் 2 நிமிடம் நின்று தேசத் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.வாகனங்களும் 2 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டன.