கல்பனா சாவ்லாவின் வெண்கல சிலை செதுக்கிய ஹூசைனி
சென்னை:
விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண், மறைந்த கல்பனா சாவ்லாவின் ஆளுயர வெண்கலச் சிலையைஉருவாக்கியுள்ளார் பிரபல கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனி.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹூசைனி கூறியதாவது:
கொலம்பியா விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போதேகல்பனாவை என்றும் நினைவில் நிறுத்தும்படியான நினைவுச் சின்னத்தை நிறுவ முடிவு செய்தேன்.
அதன்படி, இந்தச் சிலையைச் செதுக்க ஆரம்பித்தேன். கல்பனாவின் ஆளுயர சிலையை (5 அடி 4 அங்குலம்), 14அடி உயரமுள்ள கொலம்பியா விண்கலத்தின் மேல் நிற்பது போல் அமைத்துள்ளேன். அவரது வலது கை வானைநோக்கி உயர்ந்திருப்பது போல் செய்துள்ளேன்.
வீர தீர செயலுக்காக கல்பனா சாவ்லாவின் பெயரில் தமிழக அரசு வழங்கிய விருதுப் பணமான ரூ. 5 லட்சத்தை,முதன் முதலாக வாங்கிய எனது கராத்தே கல்லூரி மாணவி ரேஷ்மா சர்மா, அந்தப் பணம் முழுவதையும் இந்தச்சிலை செதுக்கும் பணிக்குத் தந்துள்ளார்.
இந்தச் சிலையை செய்து முடிக்க ரூ.8 லட்சம் செலவாகியுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைஅழைக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை.
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிய நாளான பிப்ரவரி 1ம் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணிக்குஇந்தச் சிலையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவுள்ளேன்.
இந்தச் சிலையை நிரந்தரமாக ஒரு இடத்தில் அமைப்பதற்கு முதல்வரிடம் விண்ணப்பம் செய்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications