For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை மேயரை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை நகரில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் நடை பாதைக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள்சகட்டுமேனிக்கு அகற்றுவதைக் கண்டித்து கோவை மேயர் மலரவனை முற்றுகையிட்டு நடைபாதை வியாபாரிகள்,பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள நடைபாதைக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புஅகற்றம் என்ற பெயரில் அகற்றி வருகின்றனர்.

இதையடுத்து நடைபாதைகளில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்திவரும் பெண்கள், ஆண்கள் சுமார் 500 பேர்இன்று மாநகராட்சி மன்றத்திற்கு வந்தனர். மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மேயர் மலரவனைமுற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அவர்களை மேயரும், காவல்துறை அதிகாரிகளும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். முற்றுகைப் போராட்டம்காரணமாக மாநகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X