சோ மூலம் சிதம்பரத்துக்கு சீட் கேட்கும் ரஜினி
சென்னை:
மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரத்துக்கு ஒரு தொகுதிஒதுக்கித் தரும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் சிபாரிசு செய்துள்ளார். இதுதொடர்பாக துக்ளக் ஆசிரியர் சோ மூலமாக அவர் வாசனிடம் பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதில்ஒரு இடத்தை சிதம்பரத்துக்கு ஒதுக்கிக் கொள்ளுமாறு திமுக கூறியுள்ளது. இதற்கு சோனியா காந்தி தயார் தான்என்றாலும் வாசன் உள்ளிட்ட பிற காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் உடன்பாடில்லை.
கிடைப்பதே 10. இதில் ஒன்றை அவருக்குத் தூக்கித் தருவதா என்று காங்கிரஸிஸ் முணுமுணுப்பு எதிர்ப்புகிளம்பியுள்ளது. இதனை அறிந்த சிதம்பரம் ரஜினியை அணுகியுள்ளார். ரஜினி தரப்பில் சோவிடம் இது குறித்துப்பேசப்பட்டது.
இதையடுத்து வாசனை நேரில் அழைத்துப் பேசிய சோ, ரஜினி தரப்பிலிருந்து தனக்கு வந்திருக்கும் சிபாரிசுகுறித்து எடுத்துச் சொன்னதாகவும், ஆனால் வாசனிடமிருந்து இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும்தெரிகிறது.
அதேநேரத்தில், வாசன் சோவைச் சந்தித்துப் பேசியதில் திமுக தரப்பு கடுப்பாகியுள்ளது. திமுக தலைவர்கருணாநிதியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சோவை இந்த நேரத்தில் வாசன் சந்தித்துள்ளது திமுகவுக்குதெரியவந்ததும் அறிவாலயத்தில் கோபம் கொப்பளித்தது.
ரஜினி, சிதம்பரம் விஷயம் தவிர, திமுக கூட்டணி விஷயம் குறித்தும் சோவிடம் வாசன் ஆலோசனைகேட்டதாகவும் திமுக தலைமை கருதுகிறது. ஏற்கனவே வாசன் மீது திமுக சந்தேகப் பார்வையில் இருந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சோனியாவே 10 இடங்களை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கும்போது, அவரிடம் ஜெயந்திநடராஜன் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி மேலும் 2 இடங்கள் கேட்கச் சொல்லிவற்புறுத்தியதே வாசன் தான் எனவும் திமுக நினைக்கிறது.












Click it and Unblock the Notifications