கோர்ட்டில் தீக்குளிக்க முயன்ற பெண்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. 59 வயதாகும் இவரது மகன் திருப்பதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.அவரை ஜாமீனில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்ய வந்தார் ஈஸ்வரி. ஆனால் அதற்கு செலவாகுமே என்றுசிலர் கூறியுள்ளனர்.
இதனால் மன வருத்தம் அடைந்த ஈஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்னர்மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயற்சித்தார். இதைப் பார்த்த, அங்கிருந்த போலீஸார்மற்றும் பொதுமக்கள் சேர்ந்து ஈஸ்வரியைத் தடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈஸ்வரிகைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications