பிப்ரவரி 2ம் தேதி வாஜ்பாய் கன்னியாகுமரி வருகை
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பிரதமர் வாஜ்பாய் வரும் 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார்.
நாட்டின் நான்கு மூலைகளையும் இணைக்கும் நாற்கோண சாலைப் பணிகளையும், நாகர்கோவில்-திருவனந்தபுரம்இடையேயான தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில் கனகமூலம் காய்கறி சந்தை, விளையாட்டு மையம் மற்றும் ரூ.23 கோடி செலவில்கட்டப்படவிருக்கும் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றுக்கும் அப்போது அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் வருகையையொட்டி, கன்னியாகுமாரி விருந்தினர் மாளிகை, ஹெலிகாப்டர் தளம் ஆகியவற்றை குமரிமாவட்ட ஆட்சியர் ராஜேஷ் லக்கானி பார்வையிட்டார். இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்நவீன முறையில் செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அருண்செய்தியாளர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications