இங்கே பிரச்சனை ஏதும் இல்லையே என்கிறார் புதுவை முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அம் மாநிலமுதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தொகுதியான பாண்டிச்சேரி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதைக் காரணம் காட்டி, கட்சியில் இருந்து விலகினார் மூத்ததலைவர் கண்ணன். அதிமுக-பா.ஜ.க. ஆதரவோடு எம.பி. தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். பா.ஜ.கவில்இணையவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி பரப்பி வருகிறார். அவரது இரு ஆதரவு அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.

இதற்கிடையே, முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை நீக்கிவிட்டு தனது ஆதரவாளரான வைத்தியலிங்கத்தைமுதல்வராக்கினால் மீண்டும் காங்கிரசில் இணையவதாகவும் கூறியுள்ளார்.

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, எனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது. எனவேசட்டசபையில் எனது அரசின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 30 பேர் கொண்ட சட்டசபையில் 19எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதங்கள் மீது இன்னும் நான் நடவடிக்கைஎடுக்கவில்லை. நிலவரம் குறித்து கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளேன்.

இந்த அரசியல் குழப்பம் விரைவில் தீர்ந்து விடும். அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பாண்டிச்சேரிநாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்குக் கிடைக்கும்.

அது தொடர்பான நடவடிக்கையில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+