விடுதலைப் புலிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த சந்திரிகா விருப்பம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அதிபர் சந்திரகா குமாரதுங்கா ஆர்வம்காட்டுவதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அதிபரின் பாதுகாப்புச் செயலர் சிரில் ஹெராத் புலிகளின் அமைதிக் குழு செயலாளர்புலித்தேவனுக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக புலிகளுடனான அணுகுமுறையில் அதிபரிடம் மாற்றம் இருப்பதாக அதிபர் அலுவலக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக, அண்மையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியில்குழந்தைகள் மருத்துவமனையைக் கட்ட சந்திரிகா அனுமதி வழங்கியிருப்பதை சுட்டுக்காட்டுகிறார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமிசிங்கே விடுதலைப் புலிகளுக்கு அதிக சலுகைகள் வழங்குவதாக அதிபர் சந்திரிகா கடந்தஆண்டு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications