மயிலாடுதுறை வழக்கில் வைகோவுக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவினர்தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு நாகப்பட்டனம் மாவட்ட கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 1984ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, அதிமுகவினர் சென்ற வேன் மீது திமுகவினர் தாக்குதல்நடத்தினர். இது தொடர்பாக அப்போது திமுகவில் இருந்த வைகோ, கோ.சி.மணி உள்ளிட்டோர் மீது வழக்குதொடரப்பட்டது.இந்த வழக்கில் ஜாமீன் கோரி வைகோ மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நாகை மாவட்ட கூடுதல்செஷன்ஸ் நீதிமன்றம் வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது. வைகோ மீதுள்ள மற்றொரு வழக்கான பொடாவழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் வைகோ விடுதலை ஆவார்.












Click it and Unblock the Notifications