சென்னை பேஷன் ஷோவில் ஸ்காட்லாந்து பெண் மீது தாக்குதல்
சென்னை:
சென்னையில் நடைபெற்ற தோல் ஆடைகளுக்கான பேஷன் ஷோவில், விலங்குகளுக்கு ஆதரவாக கோஷம்எழுப்பியபோது, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த, விலங்குகள் பாதுகாப்புஆர்வலரான யுவோனே டெய்லர் என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெண்கள் கேட் வாக் செய்யும் இடத்தை நோக்கி, கோஷம் எழுப்பியவாறு நான் போனேன். அப்போதுஅங்கிருந்த காவலர்கள் என்னைச் சூழந்து கொண்டு, முகத்தில் தாக்கினார்கள். பின்பு வலுக்கட்டாயமாக என்னைவெளியேற்றினார்கள்.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளை மக்களில் ஒரு சாரார் கடுமையாக எதிர்ப்பதை இந்த உலகிற்குத்தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றார்.
இந்தக் குற்றச்சாட்டை பேஷன் ஷோ அமைப்பாளர் சதீஷ் யாதவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஒருவெளிநாட்டுப் பெண் எங்களது ஷோவிற்கு இடையூறு ஏற்படுத்த முயன்றார். அவரை காவலர்கள் மூலம்அப்புறப்படுத்தினோம். அவர் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை.
நியாயமாக நாங்கள் அவரை சிறையில் அடைக்க முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயக நாட்டில் ஒருவர்தனது கருத்துக்களை சொல்ல உரிமை இருக்கிறது என்பதால், பிரச்சனையை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டோம்என்றார்.