விடுதலைச் சிறுத்தைகள்-- புதிய தமிழகம் கூட்டணி: திமுக மீது கடும் தாக்கு
சென்னை:
ஜாதிக் கட்சியான பா.ம.கவுக்கு மட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்து விட்டு எங்களை திமுகபுறக்கணித்திருப்பது நன்றி மறந்த செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
இரு தலித் கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இரு தலைவர்களும் இன்றுசெய்தியாளர்களிடம் கூட்டாக பேசினர். திருமாவளவன் கூறுகையில், திமுகவுக்கு இரு தலித் கட்சிகளும்எத்தனையோ உதவிகளைச் செய்துள்ளன. எங்களது வாக்கு வங்கிகளை அப்படியே திமுகவுக்கு தாரைவார்த்துள்ளோம்.
ஆனால் செய்த நன்றியை மறந்து விட்டு, எங்களை வஞ்சம் தீர்ப்பது போல், பா.ம.கவுடன் கை கோர்த்துக் கொண்டுஎங்களை கருணாநிதி புறக்கணித்துவிட்டார். அவரது தலித் ஆதரவு வேடம் கலைந்துவிட்டது. எங்களை ஜாதிக்கட்சி என்று கூறும் திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.கவை எந்தக் கட்சியாக கருதுகிறார்? பா.ம.க. ஜாதி பாரபட்சம்பார்க்காத கட்சி என்று அவரால் கூற முடியுமா?
முஸ்லீம் கட்சிக்கு இடம் தரும்போது எங்களுக்கு ஏன் தரக் கூடாது. முதுகில் குத்திய ராமதாசுக்கு முக்கியத்தும்தருவது ஏன்?
எங்கள் மீது தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் கருணாநிதியை கடுமையாக கண்டிக்கிறேன். முதுகுளத்தூர்,கீழ்வெண்ணி, கொடியங்குளம் சம்பவங்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நடந்தன. அவை நடக்காமல்தடுத்திருந்தால் எங்கள் இயக்கமே தோன்றியிருக்காது.
வரும் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அவைஅனைத்தும் ரிசர்வ் தொகுதிகள். அதை ஒதுக்கித்தானே ஆக வேண்டும். பொதுத் தொகுதியில் தலித்தை அவர் நிற்கவைப்பாரா?.
எங்களை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார் கருணாநிதி.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இணைந்து போட்டியிடும்.எங்களது கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். 40 தொகுதியிலும்நாங்கள் போட்டியிடுவோம்.
இனி எங்களைக் கூப்பிட்டு சீட் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் சேர மாட்டோம். கருணாநிதியை சந்திக்கவும்மாட்டோம். வாழ்நாளில் இனி அந்தத் தவறை செய்ய மாட்டோம். எதிர்காலத்திலும் டாக்டர் கிருஷ்ணசாமியும்நானும் இணைந்து செயல்படுவோம் என்றார்.
தலித் கட்சிகள் இரண்டும் இணைந்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. புதிய தமிழகத்திற்கு தென் மாவட்டங்களிலும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு வடமாவட்டங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது.
மேலும், திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள தலித் ஓட்டுக்கள் கிருஷ்ணசாமிக்கே கிடைக்கும்என்று கூறப்படுகிறது. அதேபோல, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தலித் வாக்குகள் திருமாவளவனுக்குசாதகமாகவே இருக்கும். கடலூரில் திருமாவளவனும், தென்காசியில் கிருஷ்ணசாமியும் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications