அதிமுக-பா.ஜ.க. கூட்டணி: பின்னணியில் சங்கராச்சாரியார்?
சென்னை:
அதிமுக- பா.ஜ.க. கூட்டணி உருவானதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் பங்கும் பெருமளவில் உள்ளதாகக்கூறப்படுகிறது.
கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்தபோது, கூட்டணிதொடர்பாக தான் வைத்த நிபந்தனைகளைச் சுற்றியே ஜெயலலிதா பேசியதால், கூட்டணி ஏற்படுமா என்பதேசந்தேகத்துக்கிடமாக இருந்தது.
அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இந்தவிவகாரத்தை எடுத்துச் செல்ல, எல்லாம் நல்லபடியாக முடியும் என அவர் உறுதியளித்துள்ளார். இதனால் கூட்டணிஉருவானதில் அவரது முயற்சியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது யோசனையின் அடிப்படையில் தான் துணைப் பிரதமர் அத்வானி- ஜெயலலிதா சந்திப்பும்ஏற்பாடானதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த சங்கராச்சாரியார்அங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி,இடங்கள் பங்கீடு ஆகியவை குறித்து மாநில பா.ஜ.கவினர் பேசியுள்ளனர்.
இதற்கிடையே பா.ஜ.க. தேர்தல் குழு மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால், திருநாவுக்கரசருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பதால் அதிமுக கூட்டணியை மனதில்வைத்து திருநாவுக்கரசர் அந்தக் குழுவில் இருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது.
வரும் 4ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் பா.ஜ.கவுக்கு எத்தனைத் தொகுதிகள்என்பதை ஜெயலலிதா அறிவிப்பார் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரும் 6ம்தேதி பா.ஜ.கவும் தனது பொதுக் குழுவைக் கூட்டியுள்ளது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு,
அதிமுக-பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள15 இடங்களின் பட்டியலைத் தந்திருக்கிறோம். துணைப் பிரதமர் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
இன்று அல்லது நாளையே பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிடும்என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் உடனே வெளியாகிவிடும் என்றார்.