For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டிச்சேரி பிரச்சனை தொடர்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு கையெழுத்தானதையடுத்து, கருணாநிதியுடன்சோனியா காந்தி தொலைபேசியில் பேசினார். ஆனாலும் இரு கட்சிகளுக்கும் இடையே பாண்டிச்சேரி தொகுதிதொடர்பான பிரச்சனை தொடர்ந்து கொண்டுள்ளது.

இரு கட்சிகளுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் உடன்பாடு ஏற்படுத்தியதற்காக கருணாநிதிக்கு அவர் வாழ்த்துத்தெரிவித்தார்.

இன்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தும் திமுக தலைவர் கருணாநிதியும் சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தி இந்தத் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இதையடுத்து கருணாநிதியும்கமல்நாத்தும் தனித்தனியே நிருபர்களைச் சந்தித்தனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் நீடிப்பதுஉறுதியாகிறது.

கருணாநிதி கூறுகையில், இந்த உடன்பாடு இரு தரப்புக்குமே திருப்தி தந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள்அமைக்கவுள்ள மூன்றாவது அணியால் எங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 8ம் தேதி விண்ணப்பங்கள்பரிசீலனை செய்யப்படும் என்றார்.

கமல்நாத் கூறுகையில், இரு தரப்புக்குக்குமே மகிழ்ச்சியான உடன்பாடு இது. இதற்காக கருணாநிதியை சோனியாகாந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னார். பாண்டிச்சேரி விவகாரம் பின்னர் எங்களுக்குள்பேசி, சாதகமாகத் தீர்க்கப்படும்.

தொகுதிகள் விஷயத்தில் காங்கிரஸ் எதையும் தியாகம் செய்யவும் இல்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லை.திமுகவும் நாங்களும் சுமூகமான முறையில் பேசியே இடங்களைப் பகிர்ந்து கொண்டோம். எங்கள் விஷயத்தில்மட்டுமல்ல, மற்ற கூட்டணிக் கட்சிகளையும் திமுக மிக அன்போடு நடத்தியது. எதையும் யார் மீதும் திமுகதிணிக்கவில்லை. திமுக கூட்டணி விஷயத்தில் எங்கள் கட்சியில் பிரச்சனை ஏதுமில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X