40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்: அமைச்சர்
திருச்செந்தூர்:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் என்று நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ஏழை மக்களுக்காக எம்.ஜி.ஆர்.எத்தனையோ வழிகளில் உதவிகள் செய்தார். அதே வழியில் இப்போது முதல்வர் ஜெயலலிதாவும் ஏழை,எளியவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தலின்போது ஜெயலலிதா பல்வேறு உறுதிமொழிகளை அளித்தார். அவை தற்போதுஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டுள்ளன.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள 40 பேரும் எம்.பிக்களாகதேர்வு செய்யப்படுவர். எங்கள் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுககூட்டணி மாபெரும் வெற்றிகளைப் பெறும் என்றார்.