அண்ணா நினைவு நாள்: கருணாநிதி அஞ்சலி- ஜெ. வரவில்லை
சென்னை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 35வது நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் திமுக தலைவர்கருணாநிதி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.
இன்று காலை7 மணியளவில் சேப்பாக்கம் திமுக சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலிருந்து அக் கட்சியின்தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அண்ணா நினைவிடத்தில் டிந்தஊர்வலத்தின் இறுதியில் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் நிதியமைச்சர் பொன்னையன் தலைமையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார்,துணை மேயர் கராத்தே தியாகராஜன், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைப்பதாக இருந்தது.ஆனால் அவர் வரவில்லை.
மதிமுக சார்பில் மாலையில் அவைத் தலைவர் எல்.கணேசன், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர்அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்துவதை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வருவதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications