நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுனர் உரையுடன் தொடங்குகிறது.
இது தொடர்பாக சபாநாயகர் காளிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை 11 மணிக்கு ஆளுநர் ராம்மோகன் ராவின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவெளிநடப்புச் செய்யாமல் இருந்தால், ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழில் உரைபடிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும்.
ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு 5,6,7,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூட்டத் தொடர்நடக்கும். இதில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் இடம்பெறாது.
10ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பார். அன்றைய தினமே கூட்டத்தொடர் டிவடையும்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது ராஜினாமா கடிதத்தை என்னிடம் அளித்துள்ளார். அக்கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது என்றார் காளிமுத்து.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போதும் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள்பிரச்சனை கிளப்பின. மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளன்று தான் இந்து, முரசொலி பத்திரிக்கைஆசிரியர்களைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு போட்டார் காளிமுத்து.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்து நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக, தமிழக அரசு பணிந்ததுகுறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தக் கூட்டத் தொடரின்போது பல சலுகைத்திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications