பிப். 8 முதல் திமுக வேட்பாளர் நேர்காணல்
சென்னை:
திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 5ம் தேதி முதல் 3 நாட்களுக்குத்தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம். 8ம் தேதி முதல் தொகுதி வாரியாக நேர்காணல் நடத்தப்படும் என்றுதிமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,போட்டியிட விரும்புவோர் வருகிற 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தலைமைக் கழகத்தில் தங்களது மனுக்களைஅளிக்க வேண்டும்.
அந்த மனுக்கள் 8ம் தேதி முதல் பரிசீலிக்கப்பட்டு மனு செய்தவர்களிடம் தொகுதி வாரியாக நேர்காணல்நடத்தப்படும். தேர்தல் குழு உறுப்பினர்கள் மனு செய்தவர்களிடம் பேசுவார்கள் என்றார்.
இதற்கிடையே இப்போது எம்.பிக்களாக உள்ளவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மீண்டும் சீட் தர கருணாநிதிமுடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.