புதுக்கோட்டை, தர்மபுரியில் ரூ. 20 கோடி ஹெராயின் சிக்கியது: 3 பேர் கைது
சென்னை:
புதுக்கோட்டையிலும் தர்மபுரியிலும் ரூ. 20 கோடி மதிப்புள்ள ஹெராயினை, போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று காலை ஒரு தொலைபேசித் தகவல் வந்தது.அதில் பேசியவர், சென்னையைச் சேர்ந்த ஒரு நபர், திருச்சியிலிருந்து கார் மூலம் ஹெராயின் கடத்தவுள்ளதாகவும்,அந்த ஹெராயினை கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திருச்சி விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின்உதவியுடன் கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டை அருகே ஹெராயின் கடத்தி வந்தகார் பிடிபட்டது. அதில் ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது.
காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, இதற்கு முன்பும் இதுபோல 5 முறை ஹெராயின் கடத்தியதைஒப்புக் கொண்டார்.
தர்மபுரியிலும்...
இதேபோல, தர்மபுரியிலும் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள்பறிமுதல் செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் குருபரபள்ளி என்ற இடத்தில் உள்ள லாரி ஷெட்டில் போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட ஒரு லாரியில் எட்டு பொட்டலங்களாக கட்டி மறைத்துவைக்கப்பட்டிருந்த ஹெராயினைக் கைப்பற்றினர்.
மொத்தம் 9 கிலோ ஹெராயின் அதில் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 9 கோடி ஆகும். லாரி உரிமையாளர் நரேந்திரகுமார் சர்மா, இலங்கையைச் சேர்ந்த அப்துல் சலாம் ரஷீத் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications