மக்களவை தேர்தல்: ரூ. 1,100 கோடி செலவாகும்
டெல்லி:
மக்களவைக்கு எந்தத் தேதியில் தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசதேர்தல் ஆணையர்களின் கூட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் திருத்தம், மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்குத் தேவையான அதிகாரிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
தேர்தலில் பாதுகாப்புக்கு, துணை ராணுவப் படை எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்து உள்துறைஅமைச்சகத்திடம் அனுமதி கோரப்படும். தேர்தலுக்கு முன் நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல்திருத்தத்தை முடிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
தேவைப்படும் இடங்களில் பள்ளித் தேர்வு முடிந்தபின் ஏப்ரல் மாத தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோதேர்தலை நடத்துவது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படும்.
இந்தத் தேர்தலை நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு ரூ. 1,100 கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம்கணக்கிட்டுள்ளது. கடந்தமுறை தேர்தல் நடத்த ரூ. 800 கோடி செலவானது. இம் முறை மேலும் ரூ. 300 கோடிசெலவு பிடிக்கும்.
கடந்த தேர்தலில் 534 மக்களவைத் தொகுதிகளுக்கும் 169 கட்சிகளின் சார்பில் மொத்தம் 4,600 பேர்போட்டியிட்டனர். இதற்காக 8 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இம் முறை 66 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க சுமார் 10.25 லட்சம் மின்னணுவாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.