ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா இன்று தனது தொகுதியான ஆண்டிப்பட்டியில் தேனி மாவட்டத்துக்கான பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கண்டமனூர்செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஆண்டிப்பட்டி சென்றார்.

ஜெயலலிதாவின் வருகையையொட்டி தேனி மாவட்டம் முழுவதுமே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு நடந்த விழாவில் ரூ. 127 கோடி மதிப்பில் 375 நலத் திட்டங்களைத் துவக்கி வைத்தார். விழாவுக்கு மாஜிமுதல்வரும் பொதுப் பணித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதிஆகியோரும் பங்கேற்றனர்.

கம்பத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா, 5 தலித் விடுதிகள் திறப்பு, கள்ளர் சமூகத்தினருக்குஆசிரியர் பயிற்சி பள்ளி, சாலைகள் அமைப்பு, கண்மாய் அமைப்பு,

தேனி, உத்தமபாளையம், தெப்பம்பட்டியில் 3 மகளிர் காவல் நிலையங்கள், தாசில்தார் அலுவலக குடியிருப்புகள்,துணை மின் நிலையம், மண்ணெண்ணெய் விற்பனை மையம், அவசர சிகிச்சை மையம், கூட்டுறவு வங்கி திறப்புவிழா என தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திட்டங்களை துவக்கி வைத்தார் ஜெயலலிதா.

அதே போல மேலும் உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் கோலில் அன்னதான மண்டபம், மரத் தேர்அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+