For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களவை கலைக்கப்பட்டது: ஜனாதிபதி உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளதால், 13வதுமக்களவையை ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கலைத்து உத்தரவிட்டார்.

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மக்களவை கலைக்கப்பட்டதாக இன்று ஜனாதிபதி மாளிகைஅறிவித்தது.

நேற்று ஜனாதிபதி அப்துல் கலாமை பிரதமர் வாஜ்பாய் நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் பரிந்துரையைஏற்ற கலாம், நாடாளுமன்றத்தின் மக்களவையை உடனடியாக சஸ்பென்ட் செய்தார். இன்று நாடாளுமன்றத்தைக்கலைப்பதற்கான முறையான மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து அவையை ஜனாதிபதி கலைத்து உத்தரவிட்டார். அடுத்த அரசு அமையும் வரை காபந்து அரசுக்குதொடர்ந்து தலைமை வகிக்குமாறு வாஜ்பாயை கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த வட மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து, மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை தீர்மானித்தது.

இதையடுத்து வரும் மார்ச் மாத கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் மக்களவைக்குத் தேர்தல்நடத்தப்படும் என்று தெரிகிறது.

சென்னையில் கலாம்:

இதற்கிடையே ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சென்னை வந்தார். இங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்க வந்துள்ள அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராம் மோகன்ராவ், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்ஆகியோர் வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X