புதுவை: சோனியா உதவியை கோரும் ராமதாஸ்
திண்டிவனம்:
பாண்டிச்சேரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு சோனியா காந்தி உதவ வேண்டும் என்றுஅக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி புதுவை தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை பகுதி காங்கிரஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.குறிப்பாக புதுவை பகுதி காங்கிரஸார் கொந்தளித்துப் போய்க் காணப்படுகின்றனர்.
அவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் ஒருவர் கூட பாமகவுக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டார்கள் என்றுதெரிகிறது. அதே நேரத்தில் அண்டர்கிரவுண்ட் வேலை செய்து பா.ம.கவுக்கு குழி பறிக்கவும் வாய்ப்புள்ளது.
இந் நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராமதாஸ் செய்தியாளர்களிடம்பேசுகையில், பாண்டிச்சேரி எம்.பி தொகுதி தொடர்பாக நிலவும் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன். புதுவை தொகுதியில் பாமகவுக்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவுதர வேண்டும் என்று சோனியாவிடம் கோயுள்ளேன்.
நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் சோனியாவுக்கு உள்ளது. அவர் வெளிநாட்டவர் என்ற விஷமப்பிரசாரத்தை மக்கள் நிராகத்து விடுவார்கள்.
தினமலர் நிாளிதழ் என்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. அப் பத்திரிக்கை மீதுசென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தினமலர் நிருபர் மற்றும் புகைப்படக்காரரை பாமகவினர் உள்ளே அனுமதிக்கமறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.












Click it and Unblock the Notifications