சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி ஜெ. மீண்டும் மனு
டெல்லி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடகத்திலிருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்தில் நியாயமாக நடக்கவில்லை என்று கூறி, இதை வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்றக் உத்தரவிட்டது.
இதற்காக பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஆவணங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும்பணியும் தொடங்கியது.
இந் நிலையில், காவிரி நீர்ப் பிரச்சனை, வீரப்பன் விவகாரம் காரணமாக கர்நாடகத்துக்கும், தமிழகத்திற்கும்இடையே உறவு சரியில்லை என்பதால் அங்கு வழக்கை நடத்தினால் தனக்கு நியாயம் கிடைக்காது, பாதுகாப்புஇருக்காது என்று கூறி வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு கர்நாடகம் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை நியாயமாக நடக்கும் என்று உத்தரவாதம் அளித்தது.
எனினும், காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படும் என்றும், குறிப்பாகஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரச்சனை அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு ஜெயலலிதா தரப்பில் இருந்து உடனடியாக பதில் ஏதும் தாக்கலாகவில்லை. இந் நிலையில் கடந்த வாரம்ஜெயலலிதாவை துணைப் பிரதமர் அத்வானி சந்தித்ததைத் தொடர்ந்து அதிமுக-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டது.அப்போது ஜெயலலிதா சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்பட்டது.
இந் நிலையில், இன்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,நான் என்ன கூறியிருந்தேனோ அதையேதான் கர்நாடக அரசும் கூறியுள்ளது. முன்பு ஒரு முறை மேனகா காந்திசம்பந்தப்பட்ட வழக்கில், ஒரு மாநிலத்தில் வழக்கை நடத்துவதற்கு அசாதாரணமான சூழ்நிலை இருந்தால் அந்தவழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இப்போது என் வழக்கிலும் அத்தகைய சூழ்நிலைதான் உள்ளது. என் பாதுகாப்பு மட்டுமன்றி, சாட்சி சொல்லவருபவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறியுள்ளார்.
இந்த மனுவின் மீது வரும் 9ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications