வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு ஏப்.16ல் தூக்கு தண்டனை
பெங்களூர்:
உச்சநீதிமன்ற தீர்ப்புப்டி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு ஏப்ரல் 16ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற மைசூர் மாவட்டமுதன்மை நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உத்தரவு பிறப்பித்தார்.
09-04-1993ம் தேதி பாலாறு அருகே நடந்த கன்னிவெடி தாக்குதலில் போலீஸார் 21 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா, பிவிலேந்திரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிமைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4 பேரின்ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
இந் நிலையில், 4 பேரையும் ஏப்ரல் 16ம் தேதி பெல்காம் மத்திய சிறையில் தூக்கிலிட மைசூர் மாவட்ட நீதிபதி ஹெக்டே உத்தரவுபிறப்பித்துள்ளார். மைசூர் மத்திய சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பெல்காம்சிறைக்குத் தூக்குத் தண்டனையை மாற்றியுள்ளதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications