ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு
சென்னை:
ரஜினிக்கு எதிராகப் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாசின் கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதையடுத்து கொடும்பாவி எரிப்பை உடனடியாக நிறுத்துமாறு ரசிசர்களுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி ரசிகர்கள்- பா.ம.கவினர் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க மோதல் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இதுவரை பா.ம.கவுக்கு எதிராக அறிக்கை, ராமதாசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வந்த ரஜினி ரசிகர்கள் இப்போது ராமதாசின் கொடுப்பாவி எரிப்பில் இறங்கியுள்ளனர். ரஜினியைக் கேவலமாகத் திட்டிய ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், தினமலர் பத்திரிக்கை தான் வேண்டுமென்றே ரஜினி குறித்து ராமதாஸ் பேசாததையையும் சேர்த்து வெளிட்டு பிரச்சனை கிளப்பியதாக பா.ம.க.வினர் கூறுகின்றனர். ரஜினி சேற்றில் விழுந்த பன்றி என்று ராமதாஸ் சொன்னதாக முதலில் செய்தி வெளியிட்டது தினமலர் தான் என்று கூறும் பா.ம.கவினர் அதை மறுத்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் அந்தப் பத்திரிக்கை மீது வழக்கு போடப் போவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந் நிலையில் ராமதாசே அவ்வாறு பேசவில்லை என்று மறுத்துவிட்ட பிறகு அவரது கொடும்பாவி எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது மன்றப் பொறுப்பாளர் சத்யநாராயணா மூலம் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடெங்கும் சிறப்பா செயல்பட்டு வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த 4ம் தேதி திருவண்ணாமலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராமதாஸ் அவர்கள் ரஜினயை மிகவும் தரக் குறைவாகப் பேசிய செய்தி கண்டு நம் ரத்தம் கொதிக்கிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் நீங்களும் பல வகையில் எதிர்ப்பைத் தெரிவித்தீர்கள்.
ஆனால், ராமதாஸ் அவர்களே ரஜினிகாந்த் பற்றி தரக் குறைவாகப் பேசவில்லை என்று மறுத்திருக்கிறார். பத்திரிக்கையில் வந்த செய்தியையும் மறுத்துள்ளார். இந் நிலையில் நீங்கள் அவரது கொடும்பாவி எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.