For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலவுக்குப் போகலாம்: மாணவர்களுக்கு கலாம் அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்தியாவின் நிலவுப் பயண ஆராய்ச்சித் திட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர்அப்துல்கலாம் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் அவர் பேசுகையில், நிலவுக்குவிண்கலத்தை செலுத்துவதற்கான ஆய்வுகளில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதில், மாணவர்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்களும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பைத் தரலாம்.

உங்களது மனதில் தோன்றும் எந்தவிதமான அறிவியல் யோசனைகளையும் மத்திய அரசின் எந்த ஆய்வு நிறுவனத்திற்கும் இ-மெயில் அல்லது தபால் மூலம் அனுப்புங்கள். நீங்கள் கொடுக்கும் திட்டம் தேர்வு செய்யப்பட்டால், இஸ்ரோவின் நிலவுத்திட்டத்தில் நீங்களும் பங்கேற்க தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. உலகில் 5 நாடுகளால்தான்விண்கலங்களை வடிவமைத்து தயாரிக்க முடிகிறது. ராக்கெட்டுகளை ஏவ முடிகிறது. செயற்கைக் கோள்களை தயாரிக்கமுடிகிறது. அதில் நாமும் ஒரு நாடு.

ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் மாணவர்கள் பட்டப் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு பட்டதாரிக்கும்,இந்தச் சமுதாயத்தை மேம்படுத்தும் கடமை உண்டு.

நான் ஒரு பொறியாளரைப் பார்க்கும்போது, கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுக்கும்திறமை கொண்டவராகவும், தொழிற்சாலைகளை நிர்வகிக்கப் போகிறவராகவும்தான் பார்க்கிறேன் என்றார் அப்துல் கலாம்.

புற்றுநோயின் கொடுமை: கலாம் கவலை

பின்னர் சென்னை அடையாறு புற்று நோய் ஆய்வு மையத்தின் பொன் விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்து கலாம் பேசுகையில்,

புற்று நோயை முறியடிக்க, நாட்டிலுள்ள அனைத்து புற்றுநோய் மையங்களிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் கூட்டாக ஆய்வில்ஈடுபட வேண்டும்.

பிசியாலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட் மற்றும் இம்யூனாலஜிஸ்ட் ஆகிய 3 துறை நிபுணர்களும் இணைந்து புற்று நோய் கட்டுப்பாட்டுஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் புற்று நோயின் கொடுமைகளுக்கு ஓரளவு முடிவு கட்ட முடியும்.

இந்த ஆய்வின் மூலம் நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். புற்று நோயுடன் வாழ்பவர்களை நினைத்து நான் மிகவும்வருந்துகிறேன். நம் மருத்துவமனைகளில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவே படுக்கை வசதிகள்உள்ளன. இதை அதிகரிக்க வேண்டும்.

பெங்களூரில் உள்ள புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் நான் பணிபுரிந்துள்ளேன். மார்பகப் புற்று நோய், கீமோதெரபி, செர்விகல்புற்றுநோய் ஆகியவை குறித்த ஆய்வுகளிலும் நான் ஈடுபட்டிருந்தேன்.

இந்தியாவை புகையிலை இல்லா நாடாக மாற்ற வேண்டும். அது மாணவர்களால் முடியும். புதிய சமுதாயம், புகையில்லாதசுகாதாரத்தை அனுபவிக்க வேண்டும். தேவையில்லாதவற்றில் சிக்கி மனித வாழ்க்கையை நாம் வீணடிக்கக் கூடாது என்றார்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X