புதுவை கண்ணனுக்கு காங்கிரஸ் சமாதான கொடி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள கண்ணன் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தேர்தல் நேரத்தில் அவரது விலகல் காங்கிரசுக்கு சரிவை ஏற்படுத்தலாம் என்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில்அகில இந்திய பொதுச் செயலாளர் கமல்நாத் ஈடுபட்டுள்ளார். அவரது அழைப்பின் பேரிலேயே கண்ணன் டெல்லி சென்றுள்ளதாகதெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அவரை சந்திக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
காங்கிரசுக்கு பாண்டிச்சேரி எம்.பி தொகுதியை திமுக தராததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து விலகியதாக கண்ணன்சொன்னாலும், முதல்வர் ராமசாமியுடனான பிரச்சனைகளே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதனால்தான் சில நாட்களுக்கு முன் ராமசாமியை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார் சோனியா காந்தி. இது கண்ணன்தரப்புக்கு உற்சாகம் தந்துள்ளதால், அவரை சமாதானப்படுத்திவிட முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
கண்ணனுக்கு பா.ஜ.க. வலைவிரித்து வருவதால் இந்த சமாதான முயற்சிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணனின் ஆதரவாளரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவருமான லட்சுமி நாராயணனும் உடன் சென்றுள்ளர்.இதற்கிடையே பதவி விலகிய லட்சுமி நாராயணன் மற்றும் ஏழுமலை ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டாம்என்றும் முதல்வர் ரங்கசாமிக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications