தமிழகத்தில்தான் அரசு ஊழியர்கள் மிக அதிகம்: பொன்னையன்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமான அளவில் அரசு ஊழியர்கள் இருப்பதாக நிதியமைச்சர் பொன்னையன்தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நடந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இடைமறித்துஅவர்பேசுகையில்,
இந்தியாவிலேயே அதிக அளவு மாநில அரசு ஊழியர்கள் உள்ளது தமிழகத்தில் தான். அரசு ஊழியர் பணி சீரமைப்பு தொடர்பாகநியமிக்கப்பட்டுள்ள கமிஷன், அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆளெடுப்பதை நிறுத்தவும் பரிந்துரைசெய்துள்ளது.
999 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை பறிபோனதற்கு அரசு காரணமல்ல. அவர்கள்தான் வேலைநிறுத்தம் செய்தார்கள்,அதற்கு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்தார்கள். அரசியல் பின் பலத்துடன் அவர்கள் வேலைநிறுத்தம் செய்து, வேலைபறிபோனதற்கு அரசைக் கூறை கூறக் கூடாது.
வேலைநிறுத்தத்திற்கு முன் பேச்சு நடத்தலாம் என்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் ஊழியர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவே மாட்டோம் என்று அரசு ஒருபோதும் கூறவில்லை.
மாநில நிதி நிலை சரியான பிறகு கோரிக்கைகள் படிப்படியாக பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றுதான் அரசு கூறி வந்ததுஎன்றார் பொன்னையன்.