திருப்பதி பெரிய ஜீயர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி தேவஸ்தானத்தின் பெரிய ஜீயர் திருவேங்கட ராமானுஜ சுவாமிகள் இன்று காலைமரணமடைந்தார். அவருக்கு வயது 90.
இந்த தேவஸ்தானம் தான் திருப்பதி ஆலயத்தை நிர்வகித்து வருகிறது.
வேத விற்பன்னரான ராமானஜ சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் தனது திருப்பணியை திருப்பதி ஆலயத்தில் துவக்கினார்.கடந்த 1988ம் ஆண்டு இளைய ஜீயர் பட்டத்துக்கு உயர்த்தப்பட்டார். 1995ம் ஆண்டில் பெரிய ஜீயரானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து திருமலைதிருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.












Click it and Unblock the Notifications