விடுதலை ஆனார் வைகோ!

Subscribe to Oneindia Tamil

வேலூர்:


வேலூர் மத்திய சிறையிலிருந்து இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுதலையாகிவெளியே வந்தார்.

578 சிறை வாசத்துக்குப் பின் வெளியே வந்த அவருக்கு சி வாசலில் மதிமுக தலைவர்கள், ஆயிரக்கணக்கானதொண்டர்கள், வழக்கறிஞர்கள் வைகோவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பளித்தனர். சிறை வாயிலில் வெடிகளைப்போட்டு அந்தப் பகுதியையே அதிரச் செய்தனர் மதிமுகவினர்.

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக கூறிவைகோவும், மற்ற 8 மதிமுகவினரும் கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

ஜாமீனில் வெளியே வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து வந்தார் வைகோ திமுக தலைவர் கருணாநிதியின்வேண்டுகோளின்பேரில் ஜாமீன் கோர முடிவு செய்தார் வைகோ.

அதன்படி பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோ ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் பொடா நீதிபதிராஜேந்திரன் மிகக் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

இதை ஏற்க மறுத்த வைகோ, நிபந்தனைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு நிபந்தனைகள்தளர்த்தப்பட்டன.

இதைடுத்து நேற்று மாலை பொடா நீதிமன்றம் முறைப்படி ஜாமீன் உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவு நேற்றுஇரவே வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

இரு தினங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறையிலேயே சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை 9.45மணிக்கு வைகோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தார்.

சிறை வாசலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் உற்சாகக் கூக்குரலிட்டு தங்களது தலைவரைவரவேற்றனர். அந்தப் பகுதியே அதிரும் அளவுக்கு வைகோவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு சால்வைகளையும், மாலைகளையும் அணிவித்து தொண்டர்கள் இனிப்புகளை ஊட்டினர்.

பின்னர் வேன் மூலம் அங்கிருந்து வைகோ சென்னை கிளம்பினார். அவரது காரைத் தொடர்ந்து சுமார் 300கார்களில் தொண்டர்களும் உடன் சென்றனர். வழியெங்கும் அவர் மதிமுக தொண்டர்களைச் சந்தித்துவாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.

சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் அவருக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது.பின்னர் எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார் வைகோ.

அங்கு மதிமுக தொண்டர்களைச் சந்தித்த பின்னர் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையையும்நடத்துகிறார்.

பின்னர் பெரியார், அண்ணாவின் சிலைகளுக்கு மாலையணிவித்துவிட்டு அண்ணா அறிவாலயம் செல்லும்வைகோ திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறார்.

வைகோவை வரவேற்பதற்காக அவரது தாயார் மாரியம்மாள், கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவரும், வைகோவின்தம்பியுமான ரவிச்சந்திரன் சென்னை வந்துள்ளனர்.

கலிங்கப்பட்டிக்கு வரும் மண்ணின் மைந்தரான வைகோவை சிறப்பாக வரவேற்க அந்த ஊர்க்காரர்கள் மிகப் பிரமாண்டமானஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கிராமம் முழுவதும் ஒரே பரபரப்பு மயமாக உள்ளது. யாரைப் பார்த்தாலும் வைகோ வருகிறார்,வைகோ வருகிறார் என்று உணர்ச்சிமயமாக உள்ளனர்.

தங்களது தலைவர் இல்லாமல் 2 பொங்கல் பண்டிகை கடந்து போய் விட்டது. வைகோ இன்று வருவதுதான் தங்களுக்குஉண்மையான பொங்கல் பண்டிகை என்று கிராமத்தினர் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.

வைகோவை வரவேற்க ரஜினியின் முத்து படத்தில் வரும் சாரட் வண்டியை வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதில் வைகோவைஅமர வைத்து அழைத்து வரும் திட்டம் உள்ளதாம். அதேபோல, ஒட்டகம், யானைகள் ஆகியவையும் வைகோவை வரவேற்ககாத்துள்ளன.

கிராமத்தில் உள்ள பெரிய மைதானத்தை சமன்படுத்தும் வேலையில் அந்த ஊர் இளைஞர்கள் தாங்களாகவே ஈடுபட்டுள்ளனர்.கிராமத்துக்கு வரும் வைகோ இங்கு பொதுக் கூட்டத்தில் பேசுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். 40,000 பேர் அமர்ந்து பார்க்கும்வகையில் மைதானம் சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 20 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மொத்தத்தில் வைகோவை ஒரு அரசியல் தலைவராக மட்டும் பார்க்காமல், தங்களது குடும்பத் தலைவன் சிறையிலிருந்து மீண்டுவருவதைப் போலவே காத்திருக்கிறார்கள் கலிங்கப்பட்டிக்காரர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+