ஓரிரு நாட்களில் 3-வது அணி உருவாகும்: திருமாவளவன்
சென்னை:
3வது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுள்ளன. ஓரிரு நாட்களில் இது குறித்து அறிவிப்புவெளியாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் இது குறித்து திருமாவளவன் கூறுகையில், தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், புதியதமிழகம் ஆகியவை உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 3வது கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் கூட்டணி தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றார்.
அதேசமயம், திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், புதியதமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகள் சேர்ந்து புதியகூட்டணி அமைக்கவுள்ளன. மேலும் சில கட்சிகளும் எங்களது கூட்டணியில் சேரவுள்ளன.
இந்தக் கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலை தனித்து சந்திக்கும், அதிமுக - பா.ஜ.க. கூட்டணியுடன் நாங்கள்சேர மாட்டோம்.
திமுக தலைமையிலான கூட்டணி முற்போக்குக் கூட்டணி என்று கருணாநிதி கூறுவதில் நியாயமே இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள், சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களை ஒதுக்கி விட்டு, ஆதிக்க ஜாதியினருடன் கைகோர்த்துள்ள கருணாநிதி, எப்படி தனது கூட்டணியை முற்போக்குக் கூட்டணி என்று கூற முடியும் என்றார்கிருஷ்ணசாமி.