தலைமை தேர்தல் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றார்
டெல்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ நேற்று பதவி ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல்ஆணையராக கிருஷ்ணமூர்த்தி இன்று பதவியேற்றார்.
பதவி ஓய்வு பெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த லிங்டோ கூறியதாவது:
நான் அதிர்ஷ்டசாலி. என்னுடைய சக ஊழியர்கள் நல்ல முறையில் எனக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். காஷ்மீர்மாநிலத்தில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தியதை மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.
வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் குறித்து கருத்துகூறுவது போலத்தான், அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய் என்று கூறினேன்.அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஓய்வு பெற்ற அதிகாரிகள் அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது. அவர்களோடு பத்தோடு ஒன்றாய் நானும்உட்கார விருப்பமில்லை என்றார்.
லிங்டோவின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளில் காஷ்மீர் தேர்தலும், குஜராத் தேர்தலும் முக்கியமானவை. குஜராத்தேர்தலின்போது, அவருக்கும், பா.ஜ.கவுக்கும் பிரச்சனை எழுந்தது. எனினும், தேர்தலை நியாயமான முறையில்நடத்திக் காட்டினார்.
அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இன்று பதவி ஏற்றார்.லிங்டோவின் ஓய்வால் காலியான மூன்றாவது ஆணையர் பதவிக்கு கோபால்சாமி என்ற ஐஏஎஸ் அதிகாரி பதவிஏற்றார்.












Click it and Unblock the Notifications