For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை கண்ணன் ராஜினாமா வாபஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தபிறகு, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக புதுவைகாங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கண்ணன் தெரிவித்துள்ளார்.

புதுவை தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அவரதுஆதரவாளர்களான லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோர் தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமாசெய்தனர்.

இந் நிலையில், சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசிய கண்ணன் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகஅறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுவை காங்கிரஸில் உள்ள சில நிர்வாகப்பிரச்சனைகளை தலைமையின் கவனத்திற்குக் கொண்டு வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தேன்.

சோனியாவைச் சந்தித்துப் பேசிய பிறகு எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவரது தலைமையில் தொடர்ந்துசெயல்படுவோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இரு அமைச்சர்களும் தங்களது ராஜினாமாவை வலியுறுத்தப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X