நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஏப்ரல் 6ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றுதிமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதியன்று வெளியான முரசொலி நாளிதழில் டிஜிபி அலுவலகத்தை இடித்து விட்டுபுதிதாக கட்டப்படவுள்ள டிஜிபி அலுவலகம் குறித்து கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துமுதல்வருக்கும், தமிழக அரசுக்கும் அவதூறை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி தமிழக அரசின் சார்பில்முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஏப்ரல் 6ம் தேதி கருணாநிதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயபால்சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications