நாளை கிருஷ்ணகிரி மாவட்டம் உதயம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் நாளை முதல் உதயமாகிறது.
தமிழகத்தின் 30வது மாவட்டமாகும் இது. மொத்தம் 15.46 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கிருஷ்ணகிரிமாவட்டத்தின் தலைநகராக கிருஷ்ணகிரி இருக்கும்.
இந்த மாவட்டத்தில், தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய தாலுகாக்கள்இடம் பெற்றிருக்கும். தள்ளி, காவேப்பட்டனம், தளி, மத்தி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 10 பஞ்சாயத்துக்களும்இதில் உள்ளன.
கிருஷ்ணகிரி அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் நாளை நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதாகிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது ரூ. 101 கோடி மதிப்பில்செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications