இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலைத்துள்ளார்.
பாதுகாப்புத் துறையை சந்திரிகா தன்வசம் வைத்துக் கொண்டபோது, அவருக்கும், ரணிலுக்கும் இடையேயானஅதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அதனையடுத்து புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்துநார்வே தூதுக்குழு விலகியது.
அதிகாரப் பங்கீடு தொடர்பாக சந்திரிகாவுக்கும், ரணிலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்தன.
இந் நிலையில், சந்திரிகா அதிபருக்கு உண்டான கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 225 உறுப்பினர்கள்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அரசைக் கலைத்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதி பொதுத் தேர்தல்நடத்தப்படும் என்றும், ஏப்ரல் 23ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முன்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார்சந்திரிகா. அவரது வெளியுறவுத் துறை ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தகவல் தொலைத் தொடர்புத் துறைஅமைச்சராகவும், ஜெயரத்னே தபால் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். தேர்தலுக்கு முன் தனது அதிகார பலத்தை அதிகரிக்கச் செய்யவே, சந்திரிகா இவர்களைஅமைச்சர்களாக்கியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications