சேடப்பட்டி முத்தையா மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் சட்டசபை சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மூச்சுத் திணறல் காரணமாக மதுரையில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா.தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ள சேடப்பட்டி முத்தையாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை தற்போது பரவாயில்லை என்று டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications