செலவைக் குறைக்க துரைமுருகன் தந்த "ஐடியா"!
சென்னை:
தமிழக அரசுக்கு ரூ.1,500 கோடி செலவு ஏற்படுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா ஒன்றைத் தந்தார் சட்டசபை திமுகதுணைத் தலைவர் துரைமுருகன். இதற்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்கைத்தட்டலையும் தெரிவித்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடந்தது. திமுக துணைத் தலைவர்துரைமுருகன் தனது பேச்சை நிறைவு செய்யும்போது, எதிர்க்கட்சியினர் அரசுக்கு உருப்படியாக யோசனை எதையும்சொல்வதில்லை, உருப்படியான அறிவுரைகளை சொல்வதில்லை என்று அடிக்கடி ஆளுங்கட்சியினர் வருத்தம்தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு நல்ல யோசனையை நான் இப்போது சொல்கிறேன். இதைச் செய்தால் அரசுக்கு ரூ.1,500 கோடிசெலவு மிச்சமாகும். அதை வைத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தப்படும்போது ரூ. 1,500 கோடி செலவாகிறது. அதைத் தவிர்க்க, வருகின்றநாடாளுமன்றத் தேர்தலோடு, பேசாமல் சட்டசபைக்கும் தேர்தல் வைத்து விடலாம்.
அப்படிச் செய்தால், நமது அரசுக்கு ரூ. 1,500 கோடி மிச்சமாகும் என்று கூறி துரைமுருகன் உட்கார்ந்தபோதுஎதிர்க்கட்சியினர் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் ஆளுங்கட்சித் தரப்போ துரைமுருகனைகண்டித்து கோஷமிட்டது. அத்துடன் நேற்றைய விவாதம் முடிவுக்கு வந்தது.