"தண்டனையுடன்" 999 அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை!
சென்னை:
4 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து என்ற புதிய தண்டனையுடன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த சில நாட்களாக விவாதம்நடந்தது. விவாதத்திற்கு ஜெயலலிதா இன்று பதிலளித்தார்.
தனது பதிலுரையில், வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஊதியஉயர்வு ரத்து செய்யப்படும்.
அதேபோல, பதவி இறக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழையவேலையில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும். ஏற்கனவே 3ஆண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு அது 1 ஆண்டாக குறைக்கப்படுகிறது.
மேலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படிவழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு இம்மாத பிப்ரவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.தொகுப்பூதியம் பெறுவோர்க்கும் இந்த உயர்வு அளிக்கப்படும்.
என்றார் ஜெயலலிதா.
நிலவரி ரத்து
மேலும் அவர் பேசும்போது, கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டது. காவிரியிலும் உரிய நீர் வரவில்லை.இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சரியான பருவ மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பில்ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் பொருட்டும், வறட்சியை சமாளிக்கு வகையிலும்,விவசாயிகளுக்கான நிலவரி ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 2004ம் ஆண்டு முதல் ஜூன் 2004ம் ஆண்டுவரையிலான காலத்திற்கு நிலவரி ரத்து அமலில் இருக்கும்.
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.