வாசனுக்கு எதிராக நாகர்கோவில் காங்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதியை தாரை வார்த்த ஜி.கே.வாசனே பதவி விலகு என்ற கோஷங்களுடன் நாகர்கோவில்தொகுதி முழுவதிலும் காங்கிரஸார் போஸ்டர்கள் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
நாகர்கோவில் தொகுதி எப்போதும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி. ஆனால் இந்த முறை நாகர்கோவில்தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இதனால் நாகர்கோவில் பகுதியில் காங்கிரஸார் கடும் ஆட்சேபத்தில் உள்ளனர். நாகர்கோவில் தொகுதியைமீண்டும் காங்கிரஸுக்கே பெற்றுத் தர வேண்டும் என்று கோரி சென்னை வந்து காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசனிடம் கோரிக்கை வைத்து விட்டுச் சென்றனர்.
இருப்பினும் வாசன் கமுக்கமாக இருப்பதால், அதிருப்தி அதிகரித்து வாசனுக்கு எதிரான போக்கு உருவாகியுள்ளது.நாகர்கோவில், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாசனை பதவி விலகக் கோரி காங்கிரஸார் போஸ்டர்கள்ஒட்டியுள்ளனர். இவர்கள் முன்னாள் எம்.பி டென்னிஸின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லையென்றால் கூட்டணிக்காக ஓட்டுக் கேட்க மாட்டோம்என்றும் நாகர்கோவில் காங்கிரஸார் கூறி வருகிறார்கள்.