ராஜினாமாவை வாபஸ் பெற்ற 2 பாண்டி. அமைச்சர்கள்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த 2 அமைச்சர்களும் தங்களது ராஜினாமாகடிதங்களை திரும்பப் பெற்று மீண்டும் அமைச்சர்களாக செயல்படத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள்லட்சுமி நாராயணன் மற்றும் ஏழுமலை ஆகியோரும் அமைச்சரவையிலிருந்து விலகினர்.

இதனால் லேசான பரபரப்பு ஏற்பட்டது. இந் நிலையில் கண்ணனை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம்அவரிடம் சமாதானம் பேசியது, கண்ணனுக்கு முக்கியப் பதவி கொடுப்பதாகவும் மேலிடம் உறுதியளித்தது.இதனால் தனது விலகல் முடிவைக் கைவிட்டார் கண்ணன்.

இதையடுத்து அவரது சிஷ்யர்களான லட்சுமி நாராயணனும், ஏழுமலையும் தங்களது ராஜினாமா கடிதங்களைவாபஸ் பெற்றனர். நடந்ததை மறந்து விட்டு நடக்க வேண்டியதை நினைத்து ஒற்றுமையுடன் செயல்படுவோம்என்று இரு அமைச்சர்களும் மீண்டும் பணியில் சேர்ந்தது குறித்து முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+