வைகோவுக்கு வெங்கைய்யா, பெர்னாண்டஸ் வாழ்த்து
சென்னை:
ஜாமீனில் விடுதலையாகி வந்ததற்கு பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் தனக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய வைகோ,
நான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததற்கு வெங்கைய்யா நாயுடு, ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். உடல் நலம் குறித்து விசாரித்தனர். தேர்தல்களத்தில் எதிரெதிர் களத்தில் நின்று போராடினாலும் நமது நட்பு நீடிக்கும் என்று கூறினேன் என்றார்.
முன்னதாக வைகோவை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டபா.ம.க பிரமுகர்கள் சந்தித்துப் பேசினர். விரைவில் பா.ம.க நிறுவனர் ராமதாசும் வைகோவைச் சந்திப்பார் என்றுசந்திப்புக்குப் பின் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் வைகோவைச் சந்தித்துப்பேசினர்.
பொடா நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்
பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்பு வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் நேற்றுஆஜராகினர். அப்போது அரசு தரப்பு சாட்சியான போலீஸ் வீடியோ கிராபர் பழனியிடம் குறுக்கு விசாரணைநடந்தது. மீண்டும் இன்று விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications