சிறுபான்மையினர் நலன்: வாஜ்பாய்க்கு ஆற்காடு இளவரசர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதச் சார்பின்மைக் கொள்கையை தவற விட்டு விடாமல், சிறுபான்மையினருக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு, ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய்க்கு ஆற்காடு இளவரசர் அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், நாட்டின்அமைதியான, சீரான வளர்ச்சிக்கு சிறுபான்மை மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களின்உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களைப் பாதுகாக்க வேண்டியது பிரதமரின் கடமை.

மற்ற மதத்தினருக்கு எதிரான வன்முறைகள், ரத்தக் களறிகளைத் தடுத்த நிறுத்த பிரதமர் உதவ வேண்டும்.அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத மோதல்கள் என்ற பெயரில் இனியும் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது.

சிலர் மதத்தின் பெயரால் அரசியல் நடத்த முயலுகிறார்கள். அது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனியும்இதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+