39 இலங்கை அமைச்சர்களின் பதவி பறிப்பு: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் காபந்து அரசில் இடம் பெற்றிருக்கும் 39 அமைச்சர்களை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா பதவி நீக்கம் செய்துள்ளார்.
அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே நடந்து வரும் அதிகாரச் சண்டையின் உச்ச கட்டமாக, கடந்தசனிக்கிழமையன்று நாடாளூமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடத்தப் போவதாக சந்திரிகாஅறிவித்தார்.
இந் நிலையில், தேர்தல்வரை காபந்து அரசாக செயல்பட்டு வரும் ரணிலின் அமைச்சரவையிலிருந்து, காபினட்அந்தஸ்து பெறாத 27 அமைச்சர்களையும், 12 இணையமைச்சர்களையும் இன்று பதவி நீக்கம் செய்துள்ளார்சந்திரிகா. பதவி நீக்கம் தொடர்பான கடிதங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இத் தகவலை அதிபரின் ஜனதேசா பெரீஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்றம்கலைக்கப்பட்டதையடுத்து, தனக்கு இருக்கும் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி, காபினட் அந்தஸ்து இல்லாதஅமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய சந்திரிகா முடிவெடுத்ததாக பெரீஸ் கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், காபினட் அந்தஸ்து இல்லாத அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுஇலங்கையில் வழக்கமான நடைமுறையாகும்.
இத்தகைய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையிலும், போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றுவிடுதலைப்புலிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications