சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று மிக விமரிசையாகநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற்றனர்.

கடைசியாக 1990ம் ஆண்டில் தான் இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கிட்டத்தட்ட 14 ஆண்டுஇடைவெளிக்குப் பின் நடந்த இன்றைய கும்பாபிஷேகத்தில் 68 சிவாச்சாரியார்கள் பங்கேற்று வேத மந்திரங்கள்ஓதி திருப்பணியை நடத்தினர்.

முன்னதாக ஸ்ரீசெல்லாண்டியம்மன், சன்னதி விநாயகர், கடைவீதி விநாயகர் ஆகியோருக்கு யாக சாலை பூஜைகள்நடந்தன. பின்னர் இக் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதான விநாயகர், ஸ்ரீ அம்பாள் சன்தி, ஸ்ரீ ஆண்டவர் சன்னதி ஆகியவற்றின்ராஜகோபுரங்கள், விமானங்களில் யாகபூஜைகள் நடத்தப்பட்டு, ஆராதனைகள் நடந்தன. காலை 7 மணிக்குமூலஸ்தான அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் குவிந்தனர்.இதையொட்டி இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+