மதுரை: சு.சுவாமிக்கு எதிராக நடராஜன் போட்டி
மதுரை:
மதுரை தொகுதியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி போட்டியிட ஜெயலலிதா ஆதரவு தந்தால்,சுவாமியை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்நடராஜன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் நடராஜன் பேசுகையில், மதுரை தொகுதியில் போட்டியிட ஆதரவு தருமாறுஅதிமுகவிடம் சுப்பிரமணியம் சுவாமி பகிரங்கமாக கோரி வருகிறார். ஆனால் இதே சுவாமிதான், 1999ம் ஆண்டில்தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற காரணமாக இருந்தார்.
எனவே சுவாமிக்கு அதிமுக ஆதரவு தரக் கூடாது. மதுரை தொகுதியையும் ஜனதாக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. மீறிஒதுக்கினால், நான் மதுரை தொகுதியில் சுவாமியை எதிர்த்துப் போட்டியிடுவேன். அதிமுகவினரின் ஆதரவுஎனக்குக் கிடைக்கும்.
புதுக்கோட்டை தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட அதிமுக முட்டுக் கட்டை போடக்கூடாது. அந்தத்தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு அதிமுக ஜெயிக்க முடியாது.திருநாவுக்கரசருக்கு டிக்கெட் கிடைத்தால்தான் அங்கு ஜெயிக்க முடியும். அவரது ஆதரவு இல்லாத யாரும் அங்குவெல்ல முடியாது என்றார் நடராஜன்.
முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சபாநாயகர்சேடப்பட்டி முத்தையாவை சந்தித்து நலம் விசாரித்தார் நடராஜன்.
நடராஜனை விட்டு மனைவி சசிகலா பிரிந்து வெகு காலமாவது குறிப்பிடத்தக்கது. இப்போது தனதுஇனிஷியலைக் கூட சசிகலா மாற்றிக் கொண்டுவிட்டார். என். சசிகலா என்பதை மாற்றி, தனது தந்தை, தாயாரின்பெயர்களின் முதல் எழுத்துக்களை இனிஷியலாகப் போட்டு வருகிறார்.
இருப்பினும் சசிகலாவின் மறைமுக ஆதரவு இருப்பதால் நடராஜனுக்கு பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ பஞ்சமேஇல்லை. இனிஷியல் மாற்றம் கூட அம்மா மனதைக் குளிர்விக்கத் தான் என்கிறது போயஸ் கார்டன் பட்சி.