For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவதூறு வழக்கு: திருமாவளவன் மனு டிஸ்மிஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த கீழ் கோர்ட் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்டிஸ்மிஸ் செய்தது.

கடந்த 2000மாவது பிப்ரவரி மாதம் 22ம் தேதி மற்றும் மார்ச் 1 ஆகிய இரு தேதிகளிலும், சென்னை மாநகரகாவல்துறை ஆணையராக இருந்த காளிமுத்து மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் குறித்து திருமாவளவன்அவதூறாகப் பேசியதாகக் கூறி சென்னை நகர அரசு வழக்கறிஞர், 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிசென்னை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்கை மாவட்ட நீதிமன்றம், 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது. தன்னை இந்தவழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் 3வது கூடுதல் நீதிமன்றத்தில் முறையிட்டார்.ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு செய்தார். அதில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்என் மீது புகார் தரப்படவில்லை. மேலும், அவதூறு வழக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தைத் தாண்டிஇந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கை விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே தன்னை இந்தவழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், திருமாவளவனின் கோரிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை.பாதிக்கப்பட்டவர்தான் மனு கொடுக்க வேண்டும் என்பதில்லை. 3 ஆண்டுகளுக்குள் அவதூறு வழக்குகளைப் பதிவுசெய்யலாம் என சட்ட விதி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் விதி மீறல் நடைபெறவில்லை என்று கூறி திருமாவளவனின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X