சென்னை திமுக வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
சென்னை:
சென்னையில் உள்ள 3 எம்.பி தொகுதிகளுக்கும் போட்டியிட மனு செய்துள்ள திமுகவினரிடம் முன்புஅறிவிக்கப்பட்டிருந்த 13ம் தேதிக்குப் பதில்14ம் தேதி மாலை நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 15 எம்.பி. தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்துமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது தற்போது நேர்காணல் நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்குப் போட்டியிட விரும்பிவேட்பு மனு செய்துள்ளவர்களிடம் 13ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்தத் தேதி மாற்றப்பட்டு 14ம் தேதி மாலை 4 மணிக்கு முரசொலி மாறன் வளாகத்தில் நேர்காணல்நடக்கும் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
நிர்மலா பெரியசாமியின் அரசியல் ஆசை:
இதற்கிடையே சன் டிவியில் செய்தி வாசிக்கும் வணக்...கம் புகழ் நிர்மலா பெரியசாமி திருச்செங்கோட்டில் திமுகசார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றுவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் மீது அபிமானம் கொண்ட உறவினர்கள் தான் எனக்காக மனு செய்தனர்.ஆனால், அரசியல் பணி என்றால் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். அதற்கு இப்போது நான் தயாராகஇல்லாததால் மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.