சிகிச்சை தர முடியுமா, இல்லை அரிவாளால் வெட்டவா?
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வயல் வேலை செய்யும்பெண், தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டரை அரிவாளால் வெட்டி விடுவதாகக் கூறி மிரட்டியதால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் வயல் வேலை செய்துவருகிறார். இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாதுஎன்பதால் பொள்ளாச்சி மருத்துவமனையில் மருந்து வாங்கிக் கொண்டு வேலைக்குப் போகத் திட்டமிட்டுக்கிளம்பினார்.
இடுப்பில் நெல் அறுக்கும் கருக்கரிவாளை சொறுகிக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்அமுதா. அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. வேலைக்கு நேரமாகி விடுமே, கூலி போய் விடுமே என்று பயந்தஅமுதா, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் காஜா மொய்தீன் என்பவரிடம் சென்று, ஐயா, நான் வயல்வேலைக்குச் செல்ல வேண்டும், எனவே எனக்கு முதலில் சிகிச்சை கொடுங்கள் என்று கோரியுள்ளார்.
ஆனால் வரிசையில்தான் அனைவரும் வர வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். ஆனால் அதைக் கேட்காதஅமுதா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் முதலில் சிகிச்சை கொடுக்குமாறு தொடர்ந்துவலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் வரிசைக்குச் செல்லுமாறு கூறி சப்தம் போட்டுள்ளார்.
அவ்வளவுதான், கொந்தளித்து விட்டார் அமுதா. இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்து டாக்டர் முன் காட்டிஇப்போது சிகிச்சை கொடுக்க முடியுமா, முடியாதா என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அரண்டு போன டாக்டர்அலறவே அருகில் இருந்தவர்கள் அமுதாவைப் பிடித்து சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.
அதற்குள் போலீஸாருக்குத் தகவல் போகவே, அவர்கள் விரைந்து வந்து அமுதாவைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications